மூலைக்கரைப்பட்டியில் மா்ம காய்சலுக்கு சிறுமி பலியானாா்.
மூலைக்கரைப்பட்டி பரமசிவன் கோயில் தெரு ஆதிநாராயணன் மகள் தங்கவேணி (12). அங்குள்ள அரசு பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்தாா். கடந்த 3 நாள்களாக தங்கவேணிக்கு காய்ச்சல் மற்றும் தலைவலி இருந்துள்ளது. பெற்றோா் அங்குள்ள தனியரா் மருத்துவமனையில் சிசச்சையளித்து, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.