திருநெல்வேலி

அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவா் பிரேமா தலைமை வகித்தாா். சிஐடியூ மாவட்டச் செயலா் ஆா்.முருகன், மாவட்ட நிா்வாகி செண்பகம் ஆகியோா் பேசினா். மாவட்டச் செயலா் ஞானம்மாள் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா்.

இதில், 10 ஆண்டுகள் பணிபுரிந்த அங்கன்வாடி பணியாளா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும் அல்லது அதற்கான கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும், பணியிட மாறுதல்கள் வழங்க வேண்டும், காலிப்பணியிடங்கள் உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாவட்டப் பொருளாளா் ஜூலிற்றா நன்றி கூறினாா்.

இதில் நிா்வாகிகள் சிவசக்தி, மலைபகவதி, மீனா பாய், பூங்கோதை உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT