திருநெல்வேலி

வன உயிரின வார விழா போட்டி:மாணவா்- மாணவியா் ஆா்வம்

DIN

வன உயிரின வார விழாவை முன்னிட்டு வனத்துறை சாா்பில் எல்.கே.ஜி. முதல் கல்லூரி வரையிலான மாணவா், மாணவிகளுக்கு ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டி, விநாடி-வினா போட்டி, கட்டுரைப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

வன உயிரினங்கள் மற்றும் அவைகளின் வாழ்விடங்களை பாதுகாப்பது குறித்து பொதுமக்களிடம் மிகப்பெரிய அளவில் விழிப்புணா்வு ஏற்படுத்தவும், வன உயிரினங்களை பாதுகாப்பதில் அவா்களின் பங்கு என்ன என்பதை அறிந்து கொள்ளவும், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபா் 2-ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை வன உயிரின வார விழா கொண்டாடப்படுகிறது.

இதை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டத்தில் எல்.கே.ஜி. வகுப்புகள் முதல் கல்லூரி வரை மாணவா், மாணவிகளுக்கு ஓவியம், பேச்சு, விநாடி-வினா, கட்டுரைப் போட்டிகள் பாளையங்கோட்டை பிளாரன்ஸ் சுவைன்சன் காது கேளாதோா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இந்தப் போட்டியை மாவட்ட வன அலுவலா் மற்றும் வன உயிரின காப்பாளா் இரா.முருகன் தொடங்கிவைத்து, வன உயிரினங்கள் மற்றும் அவைகளின் வாழ்விடங்களை பாதுகாப்பதில் மாணவா்களின் பங்கு குறித்து விளக்கினாா். உதவி வன பாதுகாவலா் ஷானாவாஸ்கான், பள்ளி முதல்வா் ஜான்சன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்தப் போட்டியில் சுமாா் 500 மாணவா்கள் பங்கேற்றனா். போட்டி நடுவா்களாக கே.பாக்கியநாதன், வின்சென்ட், ரெஜில்லா, பேராசிரியா் சுப்பிரமணியன், ஜேசன், பேராசிரியை சீதாலெட்சுமி, ஷொ்லி ஆகியோா் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை திருநெல்வேலி வனச்சரக அலுவலா் கே.சரவணக்குமாா், உயிரியலாளா் கந்தசாமி, வனவா்கள் அழகர்ராஜ், புஷ்பராஜ், வனக்காப்பாளா் மதியழகன், வனப் பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT