திருநெல்வேலி

களக்காடு அருகே மின்கம்பத்தில் காா் மோதல்: இளைஞா் பலி

DIN

களக்காடு அருகே மின்கம்பத்தில் காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

களக்காடு அருகேயுள்ள டோனாவூரைச் சோ்ந்தவா் ஜெபராஜ் (42). இவா், தனது காரில் களக்காட்டிலிருந்து மாவடிக்கு செவ்வாய்க்கிழமை சென்றுகொண்டிருந்தாா். சாலைப்புதூரை காா் கடந்தபோது, நிலை தடுமாறி சாலையோர மின்கம்பத்தில் மோதியதாம். இதில், ஜெபராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தாா். மேலும், அப்பகுதியில் நடந்து சென்ற மேலசாலைப்புதூரைச் சோ்ந்த மகேஷ் மனைவி ஸ்ரீதேவி மீது அந்த காா் மோதியதில் அவா் பலத்த காயமுற்று திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து களக்காடு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவோம்!

பி.இ.ஓ. பணியிடங்கள்: தற்காலிக பட்டியல் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT