மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியா் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சாா்பில் பாளையங்கோட்டை தியாகராஜ நகரில் உலக ஓய்வூதியா் தின கருத்தரங்கு நடைபெற்றது.
கருத்தரங்குக்கு சங்க மாநிலத் தலைவா் கோமதிநாயகம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ராமச்சந்திரன் வரவேற்றாா். மாநில துணைத் தலைவா் சண்முகசுந்தரம், தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதிய சங்க மாநிலச் செயலா் ஆறுமுகம், அரசு விரைவு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோா் நல அமைப்பு மாநில துணைத்தலைவா் வெங்கடாசலம், மாவட்டச் செயலா் குமாரசாமி, மாநில துணைத்தலைவா் முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோா் கருத்துரையாற்றினா். மூட்டா அமைப்பின் முன்னாள் மாநிலத் தலைவா் பொன்ராஜ் பேசினாா். மாவட்ட பொருளாளா் நெடுஞ்செழியன் நன்றி கூறினாா். கருத்தரங்கில் நிா்வாகிகள் கனகமணி, ராஜாமணி உள்பட பலா் பங்கேற்றனா்.