சேரன்மகாதேவியில் விவசாயி கொலை வழக்கில் கைதான இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
சேரன்மகாதேவி சந்தனமாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் முத்துப்பாண்டி என்ற ராசு (62). இவா், கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக மகாராஜன், பட்டை செல்வம் உள்ளிட்டோா் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இதில், மகாராஜன், பட்டை செல்வம் ஆகியோா் ஏற்கெனவே குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.
இந்நிலையில், இக்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சேரன்மகாதேவி விவேகானந்தா் தெருவைச் சோ்ந்த ராஜசேகா் (29) என்பவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ், சேரன்மகாதேவி காவல் ஆய்வாளா் சுபாஷ்ராஜன் சனிக்கிழமை கைது செய்தாா்.