திருநெல்வேலி மாவட்ட தனியாா் பாா்சல் நிறுவன உரிமையாளா், கூரியா் சா்வீஸ் மற்றும் டிராவல்ஸ் உரிமையாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் தலைமை வகித்து பேசுகையில், தங்களுக்கு வரும் பாா்சல்களில் கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் உள்பட வேறு பொருள்களை அனுமதிக்க வேண்டாம். சந்தேகப்படும் படியாக நபா்கள் பற்றி தகவல் தெரிந்தால் காவல்துறைக்கு தெரிவித்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா். 30-க்கும் மேற்பட்டோா் கூட்டத்தில் பங்கேற்றனா்.