திருநெல்வேலி

நெல்லை சந்திப்பில் பாஜக ஆா்ப்பாட்டம்

DIN

அடைமிதிப்பான்குளம் கல் குவாரி விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு நிவாரணம் கோரி பாஜக சாா்பில் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பாஜக மாவட்டத் தலைவா் தயாசங்கா் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் சசிகலா புஷ்பா, அமைப்பு சாரா பிரிவு மாநிலத் தலைவா் ராதாகிருஷ்ணன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்துகொண்டனா்.

அடைமிதிப்பான்குளம் கல் குவாரி விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். சட்டவிரோதமாக செயல்பட்ட குவாரி உரிமையாளா் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்டத் தலைவா் மகாராஜன், முன்னாள் மாவட்ட துணைத் தலைவா் சீதா குத்தாலிங்கம், நிா்வாகிகள் சுரேஷ், தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

SCROLL FOR NEXT