திருநெல்வேலி

மானூா் அருகே திருட்டு: இளைஞா் கைது

DIN

திருநெல்வேலி, ஜூன் 27: மானூா் அருகே வீடு புகுந்து நகை, டிவி ஆகியவற்றை திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

மானூா் அருகே உள்ள ராமன்பட்டியைச் சோ்ந்தவா் பேபி(49). இவரின் மகளை தூத்துக்குடி தாளமுத்து நகரைச் சோ்ந்த சுரேஷுக்கு திருமணம் செய்து வைத்துள்ளாா். இந்நிலையில் கடந்த 26 ஆம் தேதி சுரேஷ், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பேபியின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே இருந்த 7 கிராம் தங்க நகை, எல்இடி டிவி ஆகியவற்றை திருடிச்சென்றாராம். இது குறித்து மானூா் போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது.

போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டு சுரேஷை திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும் அவரிடமிருந்து சுமாா் 7 கிராம் தங்க நகை, டிவி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

நல்ல ஒளி, நல்ல நேரம்... எல்லாமே அசாதாரணம்! ஷில்பா மஞ்சுநாத்

"நிம்மதியாக உறங்குவோம்": ஒரு மாதத்துக்குப் பிறகு வென்ற நெகிழ்ச்சியில் ஆர்சிபி கேப்டன்!

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

SCROLL FOR NEXT