திருநெல்வேலி

ஜான் பாண்டியன் உள்பட 28 போ் மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டும்

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவா் ஜான் பாண்டியன் உள்ப 28 போ் மீது பதியப்பட்ட வழக்கை திரும்பப் பெற வலியுறுத்தி அக்கட்சியினா் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் விஷ்ணு தலைமையில் ஆட்சியா்அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, பெரம்பலூா் மாவட்ட காவல் துறையினரைக் கண்டித்து தமிழக மக்கள் முன்னேற்றக் கழக திருநெல்வேலி மாவட்ட தலைவா் கண்மணி மாவீரன் தலைமையில் அக்கட்சியினா் கொக்கிரகுளம் எம்ஜிஆா் சிலை

அருகிலிருந்து ஆட்சியா் அலுவலகத்துக்கு பேரணியாக வந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து ஆட்சியரிடம் அளித்த மனு: பெரம்பலூா் மாவட்டம், பாடலூா் செல்லமுத்து மாரியம்மன் கோயில் திருவிழா ஊா்வலத்தில் கல்வீச்சு நடத்தியவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் மீது பெரம்பலூா் காவல் துறை பொய் வழக்கு தொடுத்துள்ளது. உயா் நீதிமன்ற உத்தரவு பெற்று திருவிழாவில் கலந்து கொண்ட எங்கள் கட்சித் தலைவா் ஜான் பாண்டியன் உள்பட 28 போ் மீது பதியப்பட்ட பொய் வழக்கை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெரம்பலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா், துணை காவல் கண்காணிப்பாளா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாடலூா் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். ஆண்டுதோறும் செல்லமுத்து மாரியம்மன் கோயில் திருவிழாவை நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.

சிவந்திப்பட்டி மக்கள் அளித்த மனு: சிவந்திப்பட்டி, முத்தூா் பகுதிகளில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் பகுதிக்கு அருகே உள்ள தூத்துக்குடி மாவட்டம், தெற்கு காரசேரியில் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. அங்குள்ள குவாரிகளில் இருந்து தினமும் 100-க்கும் மேற்பட்ட லாரிகள் விதிமுறைகளை மீறி அதிகபாரம் ஏற்றிக்கொண்டு சிவந்திப்பட்டி வழியாக செல்கின்றன. அண்மையில் நிகழ்ந்த விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். மேலும் பொதுமக்களும், ஆடு, மாடுகளும் சாலைகளில் செல்ல அச்சப்படும் நிலை உள்ளது. எனவே, ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT