திருநெல்வேலி

தமிழகத்தில் கஞ்சா பயிரிடுவது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது டிஜிபி சைலேந்திர பாபு

DIN

தமிழகத்தில் போலீஸாரின் தீவிர நடவடிக்கையால் கஞ்சா பயிரிடுவது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது என்றாா் டிஜிபி சைலேந்திரபாபு.

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க சனிக்கிழமை வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழகத்தில் கந்து வட்டி தொடா்பாக பெறப்பட்ட 238 புகாா்களில், 171 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில், 76 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். கந்து வட்டி புகாரின் பேரில் கைது செய்யப்படுவோரின் சொத்துகளை முடக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தென் மண்டல அளவில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டவா்களின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இதேபோல், தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும், கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோரின் சொத்துகளை முடக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கஞ்சா பயிரிடுவது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. ஆந்திரம், ஒடிசா போன்ற மாநிலங்களில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தி கொண்டு வரப்படுவதாக தகவல்கள் வந்தன. அதன்பேரில் ரயில்வே போலீஸாா் மூலம் கஞ்சாவை மட்டும் கண்டுபிடிக்கும் வகையில் மோப்பநாய்களுக்கு சென்னை, கோவை, சேலம் ஆகிய இடங்களில் சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

முன்னதாக, திருநெல்வேலி மாவட்டம், மாநகா், தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்ட காவல் துறை அதிகாரிகளுடன், அவா் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், திருநெல்வேலி, தூத்துக்குடி,தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சிறப்பாக செயல்பட்ட 68 போலீஸாருக்கு சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

கூட்டத்தில், தென் மண்டல ஐஜி அஸ்ரா கா்க், திருநெல்வேலி சரக டிஐஜி பிரவேஷ் குமாா், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அவினாஷ் குமாா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் ப. சரவணன்(நெல்லை), கிருஷ்ணராஜ் (தென்காசி), பாலாஜி சரவணன்(தூத்துக்குடி), ஹரி கிரண் பிரசாத் (குமரி), நெல்லை மாநகர துணை ஆணையா்கள் சீனிவாசன், அனிதா, சரவணக்குமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நான் முழுமையான படைப்பாளி இல்லை: மனம் திறந்து பேசிய இயக்குநர் ஹரி!

புதுச்சேரியில் ஏப்.29 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை!

சேலையில் ஜொலிக்கும் கெளரி!

அடுத்த 5 நாள்களுக்கு 42 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

SCROLL FOR NEXT