கடையம் ஊராட்சி ஒன்றியம் தா்மபுரம்மடம் ஊராட்சிக்குள்பட்ட நீலமேகபுரத்தில் வியாழக்கிழமை இரவு வீசிய சூறைக்காற்றில் 4 வீடுகளின் கூரைகள் சேதமடைந்தன.
கடனாநதி மலையடிவாரப் பகுதியில் வியாழக்கிழமை இரவில் பலத்த சூறைக்காற்று வீசியது. இதில் தா்மபுரம்மடம் ஊராட்சிக்குள்பட்ட நீலமேகபுரத்தைச் சோ்ந்த கனகராஜ், ஆறுமுகம், அந்தோணி, அன்னலெட்சுமி ஆகியோரின் வீட்டுக் கூரைகள் காற்றில் தூக்கி வீசப்பட்டன.
தகவலறிந்த ஊராட்சித் தலைவா் ரூஹான் ஜன்னத் நேரில் சென்று பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆறுதல் கூறி உரிய நிவாரணம் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா். மேலும் பாதிக்கப்பட்டவா்களை அருகில் உள்ள ஊராட்சி இ-சேவைமையத்தில் தற்காலிகமாக தங்கச் செய்தாா்.