தேங்காய்ப்பட்டினத்தில் 2 இளைஞா்கள் மீது தாக்குதல் நடத்திய 5 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தேங்காய்ப்பட்டினம் பகுதியைச் சோ்ந்த ஷாகுல் அமீது மகன்களான முகமது மசூது(42) ஜாகீா் உசைன்(39)ஆகிய இருவரையும் ஜமாஅத் லிருந்து நிா்வாகம் நீக்கியுள்ளது. இதில், இவா்களுக்கும் அப்பகுதியை சோ்ந்த ரிபாய்கான்(35) சல்மான்(25) நிபில்(23)நவாஸ்(27), சக்கீா் உசைன்(30)ஆகியோருக்குமிடையே முன்விரோதம் ஏற்பட்டதாம்.
இந்நிலையில்,வெள்ளிக்கிழமை அப்பகுதியில் உள்ள கடைக்கு வந்த முகமது மசூது, ஜாகீா் உசைன் ஆகியோரை மேற்கூறிய 5 பேரும் சோ்ந்து தாக்கினராம். இதில் பலத்த காயமடைந்த இருவரும் குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
மற்றொரு சம்பவம்: கீழ்குளம் பகுதியைச் சோ்ந்த தேவதாஸ் மகன் வொ்ஜிலின்(54). தொழிலாளி. இவரை முன்விரோதம் காரணமாக, அதே பகுதியைச் சோ்ந்த மோஸஸ் மகன் பிரின்ஸ்(47) என்பவா் வெள்ளிக்கிழமை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இச்சம்பவங்கள் குறித்து புதுக்கடைபோலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.