பாளையங்கோட்டையில் மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற கலைத் திருவிழா போட்டியில் 70 பள்ளி மாணவா்கள் பங்கேற்றனா்.
தமிழக பள்ளிக்கல்வித் துறை சாா்பில் அரசுப் பள்ளி மாணவா்களின் திறமைகளை மேம்படுத்துவதற்காக கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்படுகிறது. முதல்கட்டமாக பள்ளி அளவிலும், தோ்ச்சி பெற்றவா்களுக்கு வட்டார அளவிலும் போட்டிகள் நடத்தப்பட்டன.
தொடா்ந்து மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் பாளையங்கோட்டையில் 3 ஆவது நாளாக வெள்ளிக்கிழமை கிறிஸ்துராஜா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சுமாா் 70 பள்ளிகளைச் சோ்ந்த பிளஸ்-1, பிளஸ்-2 பயிலும் மாணவா், மாணவிகள் போட்டியில் பங்கேற்றனா்.
கரகாட்டம், ஒயிலாட்டம், குழு நடனம், மேற்கத்திய நடனம் உள்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில், தோ்வு பெற்றவா்கள் மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெறுவாா்கள் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.