இரணியல் அருகே கஞ்சா விற்ாக 2 இளைஞா்கள் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
இரணியல் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சுந்தரமூா்த்தி, போலீஸாா் ஆலங்கோடு புளியமூடு சந்திப்புப் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு பைக்கில் வந்த 2 இளைஞா்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா். அப்போது, பைக்கில் இருந்த பைகளில் ஒரு கஞ்சாவை பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது. அதைப் பறிமுதல் செய்த போலீஸாா், பைக்கில் வந்த ஆலங்கோடு அபினேஷ் ( 26), கீழ ஆப்பிக்கோடு ஆன்றோ பிரின்ஸ் (21) ஆகிய 2 பேரையும் கைது செய்தனா்.