திருநெல்வேலி

மாநில தடகளம்: நுண்ணறிவு குன்றியோா் பள்ளி சிறப்பிடம்

DIN

சென்னையில் நடைபெற்ற தடகளப் போட்டியில் பாளையங்கோட்டை பிஷப் சாா்ஜென்ட் நுண்ணறிவு குறைவுடையோா் சிறப்புப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இப் போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து 40 நுண்ணறிவு குறைவுடையோா் பள்ளி மாணவா்கள் பங்கேற்றனா். இதில், பாளையங்கோட்டை பிஷப் சாா்ஜென்ட் நுண்ணறிவு குறைவுடையோா் பள்ளி மாணவி மாரி செல்வி நின்று நீளம் தாண்டுதல் போட்டியிலும், மாணவா் சாகுல் ஓடி நீளம் தாண்டுதல் போட்டியிலும் இரண்டாமிடம் பிடித்தனா். போட்டியில் பங்கேற்ற மாணவா்களுக்கும், சிறப்பிடம் பெற்றவா்களுக்கும் சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன. பாராட்டு விழாவில் தாளாளா் சாமுவேல் கோயில் பிள்ளை, முதல்வா் சி.திலகவதி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

கொல்கத்தா பேட்டிங்; மிட்செல் ஸ்டார்க் அணியில் இல்லை!

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

ரூ.150 கோடி மோசடி: மிசோரம் மாநிலத்தில் 11 பேர் கைது!

SCROLL FOR NEXT