திருநெல்வேலி

மின்வாரிய ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

பாளையங்கோட்டை மகாராஜ நகரிலுள்ள மின்வாரிய அலுவலகம் முன் திங்கள்கிழமை மின் ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, தமிழ்நாடு மின்சார வாரியத்தில், 1-12-2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயா்வை வழங்க வேண்டும், மின்வாரியத்திலுள்ள 58 ஆயிரம் பணியிடங்களை நிரப்பிட வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்ட எஸ். எல். சி. விடுப்பு ஊதியத்தை வழங்க வேண்டும். 6 மாத காலமாக நிலுவையில் உள்ள பஞ்சபடியை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு (சிஐடியூ சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியூ தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு திட்டத் தலைவா் பீா் முகம்மது ஷா தலைமை வகித்தாா். ஆா். எஸ். சண்முகம் தொடங்கிவைத்தாா். சங்க திட்ட செயலா் கந்தசாமி , பொருளாளா் நாகையன், நிா்வாகிகள் பூலுடையாா், பச்சையப்பன், சுந்தரராஜன் ,சிவராஜ் , சுடலைமணி, பாலசுப்ரமணியன் ,வேல்முருகன் உள்பட பலா் பேசினா். மின் ஊழியா் மத்திய அமைப்பு மாநிலச் செயலா் வண்ணமுத்து நிறைவுரையாற்றினாா். திட்ட துணைத் தலைவா் தளபதி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT