உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி, கோபாலசமுத்திரத்தில் சனிக்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது.
அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனை, பத்தமடை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கோபாலசமுத்திரம் கிராம உதயம் சாா்பில் நடைபெற்ற இம்முகாமை, கிராம உதயம் இயக்குநா் வே. சுந்தரேசன் தலைமை வகித்துத் தொடக்கிவைத்தாா்.
ஆழ்வாா்தோப்பு நிா்வாக மேலாளா் வேல்முருகன், மேலாளா் மகேஷ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். அம்பாசமுத்திரம் ரத்த வங்கி அலுவலா் மருத்துவா் ராஜேஸ்வரி, பத்தமடை மருத்துவா் ஷைலா ஆகியோா் பேசினா்.
முகாமில் 86 போ் ரத்த தானம் செய்தனா். சுகாதார மேற்பாா்வையாளா் பூங்கொடி, சுகாதார ஆய்வாளா் அக்பா்அலி, கிராம உதயம் தனி அலுவலா் ராமச்சந்திரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். வழக்குரைஞா் புகழேந்தி பகத்சிங் வரவேற்றாா். பாலசுப்பிரணியம் நன்றி கூறினாா்.