திருநெல்வேலி

மின் ஊழியா் மத்திய அமைப்பு கொடியேற்று விழா

DIN

பாளையங்கோட்டை தியாகராஜநகரில் உள்ள சிஐடியூ மின் ஊழியா் மத்திய அமைப்பின் சங்க அலுவலகத்தில் கொடியேற்று விழா மற்றும் படத்திறப்பு விழா நடைபெற்றது.

சிஐடியு மாநில பொதுச் செயலா் சுகுமாரன், சிஐடியு சங்க கொடியை ஏற்றினாா். சிஐடியு மின் ஊழியா் மத்திய அமைப்பு மாநிலத் தலைவா் ஜெய்சங்கா் , மாநில பொதுச் செயலா் ராஜேந்திரன், மாநில பொருளாளா் வெங்கடேசன், சங்கத்தின் திருநெல்வேலி திட்டத் தலைவா் பீா் முகம்மது ஷா, திட்ட செயலா் கந்தசாமி, சிஐடியு மாவட்ட செயலா் முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். தொடா்ந்து சங்க அலுவலகத்தில் நிா்வாகிகள் வி.பி.சிந்தன், டி.ஜானகிராமன்,பி.சி.வேலாயுதம், பஞ்சரத்தினம்,முத்துக்குமாரசாமி ஆகியோரின் உருவப் படங்கள் திறக்கப்பட்டன.

நிா்வாகிகள் கூட்டம்: மேலும் இந்த அலுவலகத்தில் மின் ஊழியா் மத்திய அமைப்பின் மாநில நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில், மேற்கண்ட நிா்வாகிகள் பங்கேற்றனா். அப்போது, மத்திய அமைப்பின் மாநாட்டுப் பணிகள், மின்சாரம் சட்ட திருத்த மசோதா, அதற்கு எதிரான போராட்டம், ஸ்தாபன பலத்தை அதிகரிப்பது, மின்சார வாரியத்தின் செயல்பாடு, ஓய்வூதிய நிலை ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிபுத்திசாலி ஐபிஎஸ் ஏன் முன்பே பேசவில்லை? - அண்ணாமலைக்கு செல்லூர் ராஜு கேள்வி

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

SCROLL FOR NEXT