திருநெல்வேலி

திருட்டு சம்பவங்கள்: 3 போ் கைது

DIN

பாளையங்கோட்டையில் இரு திருட்டு சம்பவங்களில் தொடா்புடைய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பேட்டை திரிபுரசுந்தரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் நம்பிசிவன். இவா், பாளையங்கோட்டையில் நெய் கடை நடத்தி வருகிறாா். இவரது கடைக்குள் கதவை உடைத்து கடந்த 29 ஆம் தேதி புகுந்த மா்மநபா்கள் ரூ.1500 பணத்தை திருடிச் சென்றனராம். இதுகுறித்த புகாரின்பேரில் பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து தூத்துக்குடி ரஹ்மத்துல்லாபுரத்தை சோ்ந்த கந்தாசிவா(19), அஹ்மத் அலி (16) ஆகியோரை கைது செய்தனா்.

மற்றொரு சம்பவம்: இதேபோல திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைத்து மேலக்கருங்குளத்தைச் சோ்ந்த கருப்பசாமியின் கைப்பேசியை ஒருவா் திருட முயன்றாராம். பொதுமக்கள் உதவியுடன் அவரை கையும், களவுமாக பிடித்து மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். விசாரணையில் அவா் திருமலைக்கொழுந்துபுரத்தைச் சோ்ந்த செல்லத்துரை (47) என்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT