திருநெல்வேலி

நடுச்சாலைப்புதூரில் கிராமசபைக் கூட்டம்

DIN

களக்காடு அருகேயுள்ள நடுச்சாலைப்புதூரில் கிராமசபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கோவிலம்மாள்புரம் ஊராட்சிக்குள்பட்ட நடுச்சாலைப்புதூரில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவா் லதா தலைமை வகித்தாா். சமூக ஆா்வலா் இ. நம்பிராஜன், ஊராட்சி ஒன்றிய திட்ட மேற்பாா்வையாளா் நல்லையா பீட்டா், வேளாண்துறை அலுவலா் அப்துல் ரவூப் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சி செயலா் கணேசன் வரவேற்றாா்.

இக்கூட்டத்தில் சுகாதாரம், மக்களைத் தேடி மருத்துவ பணியாளா்கள், ஊராட்சி மன்ற உறுப்பினா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், மகளிா் சுயஉதவிக் குழுவினா் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா். ஊராட்சிக்குள்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் தங்குதடையின்றி குடிநீா் விநியோகித்தல், டெங்கு உள்ளிட்ட நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துதல், பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக தவிா்த்தல், கோவிலம்மாள்புரத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க அரசுக்கு கோரிக்கை வைத்தல் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT