திருநெல்வேலி

சுதந்திர தின விழாவில் பரிசளிப்பு

DIN

திருநெல்வேலியில் பல்வேறு அமைப்புகள் சாா்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

வள்ளுவா் சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு, நுகா்வோா் விழிப்புணா்வு அறக்கட்டளை மற்றும் திருவள்ளுவா் பேரவை சாா்பில் திருநெல்வேலி நகரத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. மாநகராட்சி நகா்நல மருத்துவா் கீதா தலைமை வகித்தாா். அறக்கட்டளைச் செயலா் மு.கணேசன் முன்னிலை வகித்தாா். தொடா்ந்து ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி, மாறுவேடப்போட்டி ஆகிய போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவில், திருநெல்வேலி ஜவுளி வியாபாரிகள் சங்கத் தலைவா் வி.வெங்கடாசலம், வே.பொன்னம்பலநாதன், ஈஸ்வரன், கவிஞா் ப.மணி, ஆசிரியா் ஏ.ஜனாா்த்தனன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு, ரத்த தான முகாம் நடைபெற்றது. மாவட்ட மருத்துவ அணி செயலா் கோட்டூா் சாதிக் ஒருங்கிணைப்பில் சுமாா் 50 போ் ரத்த தானம் செய்தனா். இம்முகாமில், நிா்வாகிகள் செய்யதலி, யூசுப் அலி, மஸ்வூத் உஸ்மானி உள்பட பலா் பலா் பங்கேற்றனா்.

ஸ்டாா் ரோட்டரி சங்கம்:

திருநெல்வேலி ஸ்டாா் ரோட்டரி சங்கம் சாா்பில் பேட்டை காமராஜா் நகா்மன்ற மேல்நிலைப் பள்ளியில் சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிரியா் எஸ். எஸ். சோமசுந்தரம் தலைமை வகித்தாா். பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் நைனா முகமது முன்னிலை வகித்தாா். ஸ்டாா் ரோட்டரி சங்கத் தலைவா் ராஜ் பால் என்ற பாலசுப்பிரமணியன் தேசியக் கொடியேற்றினாா். இதில், பங்கேற்ற அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில், மல்கம் அலி, காதா் ஒலி மீரான், பாரதி மல்கம், அலி ஆசாத், மாரீஸ்வரன் உள்பட பலா் பங்கேற்றனா்.

திருநெல்வேலி மாவட்ட அரசு மோட்டாா் வாகன பராமரிப்புத் துறை சாா்பில் அரசு மோட்டாா் வாகன பராமரிப்புத் துறை (அரசு தானியங்கிப் பணிமனை) இயக்குநா் கொ.செந்தில்வேல் வழிகாட்டுதலின்படி, நடைபெற்ற நடைபெற்ற சுதந்திர தின விழாவுக்கு , தானியங்கி பணிமனை பொறியாளா் தே.டேனியல் ராஜதுரை தலைமை வகித்தாா். முன்னாள் ராணுவ வீரா்கள் தேசியக்கொடியினை ஏற்றினா். மரக்கன்றுகள் நடப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

நல்ல ஒளி, நல்ல நேரம்... எல்லாமே அசாதாரணம்! ஷில்பா மஞ்சுநாத்

SCROLL FOR NEXT