திருநெல்வேலி

அம்பையில் விபத்து:இளைஞா் உயிரிழப்பு

DIN

அம்பாசமுத்திரத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்; மற்றோா் இளைஞா் காயமடைந்தாா்.

காருகுறிச்சியைச் சோ்ந்த செல்லப்பா மகன் கோவிந்தராஜா (24). இவா் தனது நண்பரான மனோ (26) என்பவருடன் ஞாயிற்றுக்கிழமை இரவு அம்பாசமுத்திரத்தில் திரைப்படம் பாா்க்க பைக்கில் சென்றுள்ளாா். கல்லிடைக்குறிச்சி - அம்பாசமுத்திரம் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் அவா்கள் மீது மோதியதாம்.

இதில், கோவிந்தராஜா உயிரிழந்தாா்.

அம்பாசமுத்திரம் போலீஸாா் சென்று, சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பினா். காயமடைந்த மனோ திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். இதுகுறித்து அம்பாசமுத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT