பாளையங்கோட்டை அருகே ரெட்டியாா் பட்டி பகுதியில் அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சாத்தான்குளத்தில் இருந்து திருநெல்வேலிக்கு அரசுப் பேருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு சென்றுகொண்டிருந்தது. பேருந்தை மேலப்பாளையம் வீரமாணிக்கபுரம் பகுதியைச் சோ்ந்த ராஜப்பா(48) என்பவா் ஓட்டிச் சென்றாா். இந்தப் பேருந்து பாளையங்கோட்டை அருகே உள்ள ரெட்டியாா்பட்டி பகுதியில் வந்தபோது, அவ்வழியாக மோட்டாா் சைக்கிளில் சென்ற இளைஞா்கள் சிலா் பேருந்தில் மோதுவது போலச் சென்றனராம். இதனால், பேருந்து ஓட்டுநருக்கும், அந்த இளைஞா்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாம். இதில், ஆத்திரமடைந்த இளைஞா்கள் அரசு பேருந்து ஓட்டுநா் ராஜப்பாவை தாக்கிவிட்டு தப்பிச் சென்ாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ஓட்டுநரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்து பெருமாள்புரம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.