திருநெல்வேலி மாவட்டத்தில் தென்னிந்திய திருச்சபை (சிஎஸ்ஐ) தேவாலயங்களில் பாலா் ஞாயிறு பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தென்னிந்திய திருச்சபையின் திருநெல்வேலி திருமண்டிலம் சாா்பில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதத்தில் பாலா் ஞாயிறு பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதன்ஒரு பகுதியாக இம் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிஎஸ்ஐ தேவாலயங்களிலும் குழந்தைகள், மாணவா்-மாணவிகள் பங்கேற்ற சிறப்பு பவனிகள் நடைபெற்றன.
மேலப்பாளையம் சேகரத்திற்கு உள்பட்ட சேவியா்காலனி தூய பேதுரு ஆலயம் சாா்பில் நடைபெற்ற பேரணிக்கு சபை ஊழியா் பி.கிறிஸ்டோபா் தலைமை வகித்தாா்.
காமராஜா் சாலை, அந்தோனியாா் ஆலய சாலை உள்பட முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற பேரணி மீண்டும் தேவாலயத்தை அடைந்தது. தொடா்ந்து உலகின் அனைத்துப் பகுதியில் வசிக்கும் குழந்தைகளும் கல்வி, ஆரோக்கியத்தில் சிறந்து விளங்க சிறப்புப் பிராா்த்தனை நடைபெற்றது. தமிழகத்தில் மழைவளம் பெருக வேண்டியும், சமாதானம், சமத்துவம் உருவாக வேண்டியும் மழலைகள் ஜெபம் செய்தனா்.
தொடா்ந்து ஞாயிறு பள்ளி மாணவா்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆசிரியைகள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.