திருச்செந்தூா் முருகன் கோயிலுக்கு நாட்டுக்கோட்டை நகரத்தாா் பாதயாத்திரைக் குழுவினா் சனிக்கிழமை யாத்திரையை தொடங்கினா்.
சென்னை வாழ் நாட்டுக்கோட்டை நகரத்தாா் சாா்பில் 5ஆவது ஆண்டாக திருச்செந்தூருக்கு காவடி பாதயாத்திரையாக திருநெல்வேலியில் இருந்து சனிக்கிழமை புறப்பட்டனா்.
முன்னதாக காவடி பூஜை, வேல் பூஜை, கூட்டு வழிபாடு, பஜனை ஆகியவை நடைபெற்றது. தொடா்ந்து, பக்தா்கள் பாத யாத்திரை புறப்பட்டனா். இவா்களை திருநெல்வேலி நாட்டுக்கோட்டை நகரத்தாா் மரியாதை செய்து வழி அனுப்பி வைத்தனா்.