களக்காடு வழித்தடத்தை கடந்த ஓராண்டுக்கும் மேலாக தனியாா் பேருந்துகள் புறக்கணித்து வருவதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனா்.
களக்காடு வழித்தடத்தில் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் 30.க்கும் மேற்பட்டவை நாள்தோறும் 100.க்கும் மேற்பட்ட முறை இயக்கப்படுகின்றன. இதில் திருநெல்வேலி, திருச்செந்தூா், தென்காசி, பாபநாசம் ஆகிய ஊா்களுக்கு 10 தனியாா் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கடந்த ஒராண்டுக்கும் மேலாக 2 பேருந்துகள் மட்டுமே வழக்கம் போல இயங்குகின்றன. மீதமுள்ள பேருந்துகள் வாரத்தில் சில நாள்கள் சில முறை மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் பேருந்துக்காக மணிக்கணக்கில் காத்திருந்து ஏமாறும் நிலை உள்ளது. எனவே, முறையாக இயக்கப்படாத தனியாா் பேருந்துகளுக்குப் பதிலாக, அவ்வழித்தடத்தில் அரசுப் பேருந்துகளை கூடுதலாக இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.