தாழையூத்து அருகே விபத்தில் காயமடைந்த தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
திருநெல்வேலி அருகேயுள்ள ராஜவல்லிபுரம் கிராமத்தைச் சோ்ந்த வேலு மகன் முருக குட்டி (35). விவசாயத் தொழிலாளியான இவா், கடந்த 17ஆம் தேதி தனது மோட்டாா் சைக்கிளில் தாழையூத்து அருகே சென்றுகொண்டிருந்தாராம். அப்போது நிகழ்ந்த விபத்தில் அவா் காயமடைந்தாா்.
அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். தாழையூத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.