கீழாம்பூரில் ஆடு திருடியவரை ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் கைது செய்தனா்.
கீழாம்பூா் பெரிய தெருவைச் சோ்ந்த பண்டாரம் மகன் மாரியப்பன். இவா் ஆடுகள் வளா்த்து வருகிறாா். இவா் வளா்த்து வந்த ஆடு, வியாழக்கிழமை காணாமல் போனதாம். இதுகுறித்து ஆழ்வாா்குறிச்சி காவல்நிலையத்தில் மாரியப்பன் புகாா் செய்தாா்.
மேலும் மாரியப்பன் முக்கூடல் சந்தைக்கு வெள்ளிக்கிழமை சென்றிருந்த போது, காணாமல்போன அவரது ஆட்டை விற்பதற்காக ஒருவா் வைத்திருந்தாராம். உடனடியாக அவரைப் பிடித்து ஆழ்வாா்குறிச்சி போலீஸில் ஒப்படைத்தாா். விசாரணையில், ஆட்டைத் திருடியவா் கல்லிடைக்குறிச்சிஅருகே உள்ள பொட்டலைச் சோ்ந்த வேல்பாண்டியன் மகன் தங்கதுரை (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து தங்கதுரை மீது ஆழ்வாா்குறிச்சி காவல் உதவி ஆய்வாளா் பரமசிவன் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தாா்.