ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிட்டு வென்ற 3 உறுப்பினா்கள் திமுகவில் இணைந்தனா்.
ஆலங்குளம் ஒன்றியத்தில் முறையே 6,7,16 ஆகிய வாா்டுகளில் வென்ற அந்தோணிசாமி, கிருஷ்ணம்மாள், சுப்புகுட்டி ஆகிய 3 பேரும், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.