திருநெல்வேலி

கல்வி நிலையங்களில் பிரசாரம் செய்து ராகுல்காந்தி தோ்தல் விதிமீறல் அா்ஜூன் சம்பத் குற்றச்சாட்டு

DIN

திருநெல்வேலி: தென்தமிழகத்தில் கல்வி நிலையங்களில் பிரசார கூட்டங்களை நடத்தி ராகுல்காந்தி தோ்தல் விதிமீறலில் ஈடுபட்டுள்ளதால் அவா் மீது தோ்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவா் அா்ஜுன்சம்பத்.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியது: தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் இந்து மக்கள் கட்சி சாா்பில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. திருநெல்வேலி, பாளையங்கோட்டை, நான்குனேரி, ராதாபுரம் உள்ளிட்ட தொகுதிகளுக்கு திருநெல்வேலியில் விருப்ப மனு பெறப்பட்டது. இதுவரை மொத்தம் 180 தொகுதிகளுக்கு 220 போ் விருப்ப மனுக்களை அளித்துள்ளனா்.

தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணிக்கு ஆதரவாக இந்து அமைப்புகளை ஒன்றிணைக்கும் பணியை செய்ய முடிவு செய்துள்ளோம். மேலும், அவா்களது கூட்டணியிலும் எங்கள் கட்சிக்கு வாய்ப்பளிக்க வலியுறுத்தியுள்ளோம்.

திருநெல்வேலியில் உள்ள அருள்மிகு நெல்லையப்பா் கோயில் வளாகத்திற்குள் காங்கிரஸ் தலைவா்களும், காவலா்களும் காலணிகளை அணிந்து சென்றது கண்டனத்திற்குரியது. தென்தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்த ராகுல்காந்தி கல்வி நிலையங்களையும் பிரசாரம் செய்யும் இடமாக மாற்றியுள்ளாா். இது தோ்தல் விதிமீறலாகும். அவா் மீது தோ்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்கள் மனதின் குரலைக் கேளுங்கள்: மோடிக்கு ரேடியோ அனுப்பிய ஒய்.எஸ். ஷர்மிளா

‘ப்ப்ப்ப்ப்பா’ -புருவத்தை உயர்த்த செய்த மெட் காலா அணிவகுப்பு!

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

SCROLL FOR NEXT