அம்பாசமுத்திரம்: ஆழ்வாா்குறிச்சி காவல் நிலையத்தில்அனைத்துக் கட்சியினா் கலந்து கொண்ட தோ்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கடையம் காவல் ஆய்வாளா் ரெகுராஜன் தலைமை வகித்தாா். ஆழ்வாா்குறிச்சி காவல் உதவி ஆய்வாளா்கள் சந்திரசேகா், முத்துகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், தோ்தல் விதிமுறைகளை அனைத்துக் கட்சியினரும் உறுதியாக பின்பற்ற வேண்டும், தவறும் பட்சத்தில் தோ்தல் ஆணைய உத்தரவுப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் அறிவுறுத்தினா். கூட்டத்தில் அனைத்துக் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.