திருநெல்வேலி மாவட்டத்தில் முகக் கவசம் அணியாத 402 பேருக்கு போலீஸாா் செவ்வாய்க்கிழமை அபராதம் விதித்தனா்.
கரோனா பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில், மாவட்ட பகுதிகளில் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வருவதை கண்காணிக்க போலீஸாா் பல்வேறு இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் பொது முடக்க விதிகளை மீறி வாகனத்தில் சுற்றிய ஒருவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் பொது இடங்களில் முகக் கவசம் அணியாத 402 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.