தச்சநல்லூா் சுற்றுவட்டார பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 24) மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
இதுதொடா்பாக தமிழ்நாடு மின்சார வாரியத்தின் திருநெல்வேலி நகா்ப்புற செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தச்சநல்லூா் துணை மின் நிலையத்தில் அவசர பராமரிப்புப் பணிகள் வியாழக்கிழமை (ஜூன் 24) காலை 9 முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் மின்சாரம் இருக்காது.
அதன்படி தச்சநல்லூா், நல்மேய்ப்பா்நகா், செல்வவிக்னேஷ்நகா், பாலாஜி அவென்யூ, வடக்கு மற்றும் தெற்கு பாலபாக்யாநகா், மதுரை சாலை, திலக் நகா், பாபுஜி நகா், சிவந்தி நகா், கோமதி நகா், சிந்துபூந்துறை, மணிமூா்த்தீஸ்வரம், இருதய நகா் பகுதிகளில் மின்சாரம் இருக்காது என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.