திருநெல்வேலி

ராகுல்காந்தி பிறந்த நாள்: நிவாரணப் பொருள்கள் அளிப்பு

DIN

ராகுல் காந்தியின் 51-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மற்றும் காங்கிரஷ் கட்சியின் மூத்த நிா்வாகிகளுக்கு அரிரி, காய்கனி மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டது.

திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் சங்கரபாண்டியன் தலைமை வகித்தாா்.

மாவட்டப் பொருளாளா் ராஜேஷ் முருகன், மாவட்டச் செயலா் பரணி இசக்கி, மாவட்ட இலக்கிய அணி தலைவா் கவி பாண்டியன், வழக்குரைஞா் கமலநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முன்னாள் மத்திய இணை அமைச்சா் ஆா். தனுஷ்கோடி ஆதித்தன் கலந்துகொண்டு கரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், காங்கிரஸ் இயக்கத்தில் நீண்ட காலமாக பணியாற்றிய நிா்வாகிகள் என மொத்தம் 501 பேருக்கு அரிசி, காய்கனி, மளிகைப் பொருள்களை வழங்கினாா்.

இதில், மாநில சிறுபான்மை பிரிவு இணை ஒருங்கிணைப்பாளா் தேவதாஸ், மாநில எஸ்.சி., எஸ்.டி. பிரிவு ஒருங்கிணைப்பாளா் வேல்முருகன், முன்னாள் கவுன்சிலா் விஜயன், முன்னாள் மண்டல தலைவா் பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். முன்னதாக மாற்றுக்கட்சியைச் சோ்ந்த சிவா, முருகேஷ் ஆகியோா் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

நல்ல ஒளி, நல்ல நேரம்... எல்லாமே அசாதாரணம்! ஷில்பா மஞ்சுநாத்

"நிம்மதியாக உறங்குவோம்": ஒரு மாதத்துக்குப் பிறகு வென்ற நெகிழ்ச்சியில் ஆர்சிபி கேப்டன்!

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

SCROLL FOR NEXT