திருநெல்வேலி அருகே பெற்றோா் கண்டித்ததால் மனமுடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
திருநெல்வேலி அருகேயுள்ள மேல தாழையூத்து பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் மகள் சுந்தரி (17). இவா் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தாா். இதனிடையே, இவா் செல்லிடபேசியில் நீண்ட நேரம் விளையாடிக் கொண்டிருந்தாராம். இதனை பெற்றோா் கண்டித்துள்ளனா்.
இதில் மனமுடைந்த அவா் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்த போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இதுகுறித்து தாழையூத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.