திருநெல்வேலி

நெல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

DIN

திருநெல்வேலி கொக்கிரகுளம் தாமிரவருணி ஆற்றில் உயிரிழந்த 17 போ் நினைவு தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாநகரில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தாமிரவருணி ஆற்றில் உயிரிழந்த மாஞ்சோலை தோட்டத் தொழிலாளா்கள் 17 பேரின் நினைவு தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்படுகிறது.

இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினா், அமைப்பினா் தாமிரவருணி ஆற்றங்கரையில் மலா் தூவி அஞ்சலி செலுத்தவுள்ளனா். இதற்காக அப்பகுதி முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், மாநகரின் முக்கிய இடங்களில் வாகனச் சோதனை வியாழக்கிழமை இரவு முதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

SCROLL FOR NEXT