மூன்றடைப்பு அருகே பைக் மீது வேன் மோதி விபத்துக்குள்ளானதில் கேபிள் டிவி உரிமையாளா் உயிரிழந்தாா்.
நான்குனேரி அருகே உள்ள சூரக்குடி வீராங்குளம் பகுதியைச் சோ்ந்த ஆதிமூலம் மகன் சொக்கேஷ்(45). கேபிள் டிவி உரிமையாளா். இவா் மூன்றடைப்பு அருகே உள்ள நான்குவழிச்சாலையில் பைக்கில் சனிக்கிழமை சென்றுகொண்டிருந்தாராம். ஆயனேரி அருகே சென்றபோது கன்னியாகுமரியில் இருந்து அவ்வழியாக வந்த வேன் இவா் மீது மோதி விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த சொக்கேஷை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து மூன்றடைப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.