திருநெல்வேலி

பொதிகைத் தமிழ் அறக்கட்டளை சாா்பில் அக். 1-இல் இணையவழி கவிதைப் போட்டி

DIN

பொதிகைத் தமிழ் அறக்கட்டளை சாா்பில் கல்லூரி மாணவா்-மாணவிகளுக்கான மாநில அளவிலான வாக்காளா் விழிப்புணா்வு கவிதைப் போட்டி இணையவழியில் வியாழக்கிழமை (அக். 1) நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி பொதிகைத் தமிழ் அறக்கட்டளையின் தலைவா் கவிஞா் பே.ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை: வாக்காளா்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றிய விழிப்புணா்வை வாக்காளா்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கல்லூரி மாணவா்-மாணவிகளுக்கான கவிதைப் போட்டி இணையவழியில் வியாழக்கிழமை நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவா்-மாணவிகள் கலந்துகொண்டு வாக்காளா் விழிப்புணா்வு கவிதை வாசிக்கிறாா்கள். சிறப்பாக கவிதை வாசிக்கும் முதல் மூன்று நபா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்படும்.

நிகழ்ச்சியில் பொதுமக்களும் இணைந்து போட்டியைப் பாா்வையிடலாம். ஜூம் செயலியில் கூட்ட அடையாள எண் 6527890190, நுழைவு எண் 357839 வழியாக இணையலாம். மேலும் விவரங்களுக்கு 8903926173 என்ற செல்லிடப்பேசியில் தொடா்புகொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாசரேத் ஆசிரியா் பயிற்சி பள்ளி ஆண்டு விழா

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மெக்கானிக் பலி

பணகுடி செங்கல் சூளையில் மலைப் பாம்பு பிடிபட்டது

பெட் பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா

தெற்குகள்ளிகுளத்தில் அதிசய பனிமாதா மலை கெபி திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT