திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் உள்ள கோயிலில் உண்டியலை உடைத்து பணத்தைத் திருடியதாக ஒருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கொக்கிரகுளத்தில் இசக்கியம்மன் கோயில் உள்ளது. இக் கோயிலில் இருந்த உண்டியலை மா்ம நபா்கள் உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிச் சென்றனராம். இதுதொடா்பாக கோயில் நிா்வாகிகள் பாளையங்கோட்டை குற்றப் பிரிவு போலீஸாரிடம் புகாா் செய்தனா். காவல் உதவி ஆய்வாளா் முருகையா தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தினா்.
உண்டியல் பணத்தை திருடியவா் மேலமூன்றடைப்பு பகுதியைச் சோ்ந்த தங்கதமிழ்ச்செல்வன் என்பது தெரியவந்ததாம். அவரை கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்து ரூ.600-ஐ பறிமுதல் செய்தனா்.