பாளையங்கோட்டை அருகே வீட்டின் கதவை உடைத்து தங்க நகையைத் திருடிய மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பாளையங்கோட்டை அருகேயுள்ள ஓட்டுநா்கள் குடியிருப்பைச் சோ்ந்த பழனியப்பன் மனைவி சரவணா(69). இவா், பெருமாள்புரத்தில் உள்ள தனது மகளின் வீட்டுக்குச் சென்றுவிட்டு, ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பியுள்ளாா். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததாம். மேலும், பீரோவில் இருந்த 5 கிராம் எடையுள்ள ஒரு ஜோடி தங்க கம்மலை மா்ம நபா் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில், பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.