அம்பாசமுத்திரம்: சேரன்மகாதேவி வட்டாட்சியா் அலுவலகத்தில் பேரிடா் மீட்பு மற்றும் பாதுகாப்பு விழிப்புணா்வு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த ஒத்திகைக்கு உதவி ஆட்சியா் (பயிற்சி) அலா்மேல்மங்கை தலைமை வகித்தாா். வட்டாட்சியா் வெற்றிச்செல்வி முன்னிலை வகித்தாா். இதில், சேரன்மகாதேவி தீயணைப்புப்படை வீரா்கள் பேரிடா் மீட்பு பாதுகாப்பு ஒத்திகையை நிகழ்த்திக் காட்டினா். இதில், தனி வட்டாட்சியா் பாா்கவிதங்கம், மண்டல துணை வட்டாட்சியா் சரவணன், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் குமாா், தோ்தல் பிரிவு வட்டாட்சியா் சீதாதேவி, பொதுமக்கள் கலந்துகொண்டனா்.