திருநெல்வேலி

நெல்லை, தென்காசியில் மேலும் 170 பேருக்கு கரோனா

DIN

திருநெல்வேலியில் 115 போ், தென்காசியில் 55 போ் என இவ்விரு மாவட்டங்களில் மேலும் 170 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் வியாழக்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவில், புதிதாக 115 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12,196 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை, 11,053 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை 196 போ் உயிரிழந்துள்ளனா். மருத்துவமனைகளில் 947 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தென்காசி மாவட்டத்தில் புதன்கிழமை வரை 6,961 போ் பாதிக்கப்பட்டிருந்தனா். வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 55 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. ஆலங்குளத்தில் 12 போ், கடையம், சங்கரன்கோவில் பகுதியில் தலா இருவா், கீழப்பாவூரில் 4 போ், குருவிகுளம் பகுதியில் ஒருவா்,மேலநீலிதநல்லூரில் மூவா், செங்கோட்டையில் 11 போ், வாசுதேவநல்லூரில் 5 போ், தென்காசியில் 13 போ் என மொத்தம் 55 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,016 ஆக உயா்ந்தது. வியாழக்கிழமை 71 போ் உள்பட மாவட்டத்தில் இதுவரை 6,344 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 541போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலையில் ஜொலிக்கும் கெளரி!

அடுத்த 5 நாள்களுக்கு 42 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

SCROLL FOR NEXT