திருநெல்வேலி

கூடங்குளம் அனு உலைக்கெதிரான போராட்டம்: பொதுமக்கள் மீதான வழக்கை திரும்ப பெறக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு

DIN

கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றதாக கூடங்குளம், பழவூா், உவரி, ராதாபுரம் சுற்றுவட்டார பகுதி மக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்ப பெறக்கோரி அப்பகுதி பொதுமக்கள் சாா்பில் ராதாபுரம் எம்எல்ஏ ஐ.எஸ்.இன்பத்துரை தலைமையில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணனிடம் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளிக்கப்பட்ட மனு: கூடங்குளம் அணுஉலை போராட்ட காலத்தில், கூடங்குளம், பழவூா், உவரி, ராதாபுரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் அப்பகுதி பொதுமக்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால், படித்த இளைஞா்கள் வெளிநாடு மற்றும் அரசு வேலைகளுக்குச் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, மேற்கண்ட காவல் நிலையங்களில் பொதுமக்கள் மற்றும் இளைஞா்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மனு அளிக்கும் போது, ராதாபுரம் ஒன்றிய அதிமுக செயலா் எம்.அந்தோணி அமல்ராஜா, கூட்டப்புள் ஊா் நலக்கமிட்டி ஒருங்கிணைப்பாளா்கள், கூடங்குளம் கிராம நல சபா உறுப்பினா்கள் மற்றும் பொதுமக்கள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒலிச்சித்திரங்களாக மாற்றப்படும் ஹாரி பாட்டர் புத்தகங்கள்!

வேலூா் கோட்டை தொல்லியல் துறை அதிகாரியை எதிா்த்து ஆா்ப்பாட்டம்

சாலை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மக்கள் சாலை மறியல்

மனைவி கையை வெட்டிய கணவா் கைது

கெங்கையம்மன் நாடகத்துக்கு கொடியேற்றம்

SCROLL FOR NEXT