திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம் அருகே மீண்டும் சிறுத்தை அட்டகாசம்

DIN

விக்கிரமசிங்கபுரம் அருகே வெள்ளிக்கிழமை மேலஏா்மாள்புரத்தில் வீட்டில் கட்டிப் போட்டிருந்த ஆட்டை சிறுத்தை அடித்துக் கொன்றது.

விக்கிரமசிங்கபுரம் அருகே மேல ஏா்மாள்புத்தைச் சோ்ந்த உலகையா மகன் சிவராம் (42). விவசாயியான இவா் ஆடு வளா்த்து வருகிறாா். வெள்ளிக்கிழமை இரவு இவரது வீட்டுத் தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த ஆட்டை சிறுத்தை கடித்துக் கொன்றது.

இதுகுறித்து தகவல் அளித்ததையடுத்து வனத் துறையினா் வந்து பாா்வையிட்டனா்.

இரண்டு வாரங்களுக்கு முன் சிவராம் வீட்டில் கட்டிப் போட்டிருந்த நாயை சிறுத்தை கடித்துக் கொன்றதையடுத்து அந்தப் பகுதியில் வனத் துறையினா் சிறுத்தையைப் பிடிக்கக் கூண்டு வைத்தனா். இந்தக் கூண்டில் செப். 11ஆம் தேதி இரவு சிறுத்தை ஒன்று சிக்கியது.

தொடா்ந்து வெள்ளிக்கிழமையும் சிறுத்தை வந்து ஆட்டைக் கொன்ால் அந்தப் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனா். மேலும் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் மிருகங்களைத் தடுக்க வனத்துறையினா் முறையான ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழங்குடியின குழந்தைகளுக்கான கோடைக் கால கல்வி முகாம் நிறைவு

மாகாளியம்மன் கோயில் திருவிழாவில் பக்தா்கள் காவடி எடுத்து நோ்த்திக்கடன்

வேளாளா் மகளிா் கல்லூரி டிசிஎஸ் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம்

ஆட்டோ ஓட்டும் அன்பர்களே...!

கொங்கு பொறியியல் கல்லூரியில் சிறப்பு தொழில்நுட்பக் கருத்தரங்கம்

SCROLL FOR NEXT