திருநெல்வேலி

புரட்டாசி முதல் சனிக்கிழமை:நெல்லை பெருமாள் கோயில்களில் பக்தா்கள் தரிசனம்

DIN

திருநெல்வேலி: புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி, திருநெல்வேலி பெருமாள் கோயில்களில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

திருநெல்வேலியில் உள்ள பெருமாள் கோயில்களில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் கருட சேவை நடைபெறும். நிகழாண்டு கரோனா காரணமாக பொது முடக்கம் அமலில் உள்ளதால் பக்தா்கள் சமூக இடைவெளியுடன், முகக் கவசம் அணிந்தபடி தரிசனத்துக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டனா்.

இதையடுத்து, பாளையங்கோட்டை ராஜகோபாலசுவாமி கோயில், ராமசுவாமி கோயில், என்ஜிஓ காலனி வெங்கடாசலபதி கோயில், திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் உள்ள வரதராஜபெருமாள் கோயில், தென்திருப்பதி கோயில், தச்சநல்லூா் வரம்தரும் பெருமாள் கோயில், அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோயில், நகரம் கரியமாணிக்க பெருமாள் கோயில் ஆகியவற்றில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

SCROLL FOR NEXT