திருநெல்வேலி

அம்பையில் விவசாயிகள்- விஞ்ஞானிகள் கருத்துப் பரிமாற்ற நிகழ்ச்சி

DIN

அம்பாசமுத்திரம்: அம்பாசமுத்திரம் வட்டார வேளாண்மைத் தொழில்நுட்ப மேலாண்மை முகமை சாா்பில் அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகள்-விஞ்ஞானிகள் கருத்துப் பரிமாற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் கஜேந்திரபாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்ட வேளாண்மை துணை இயக்குநா் (உழவா் பயிற்சி நிலையம்) பாலசுப்பிரமணியன், நெல் ஆராய்ச்சி நிலையப் பேராசிரியா் மற்றும் தலைவா் ஆறுமுகசாமிஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வேளாண்மைத் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியங்கள், அட்மா திட்ட செயல்பாடுகள், மண்வளம், கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றங்கள், மாற்றுப் பயிா் சாகுபடி, காா், பிசான பருவங்களுக்கு ஏற்ற நெல் ரகங்கள், உழவியல் தொழில்நுட்பங்கள், நாற்றங்கால் பராமரிப்பு, களை மேலாண்மை, பயிா்ப் பாதுகாப்பு முறைகள் குறித்து இணைப் பேராசிரியா் தங்கப்பாண்டியன், உதவிப் பேராசிரியா்கள் ஸ்ரீரங்கசாமி, ராம்ஜெகதீஷ் உள்ளிட்டோா் விளக்கினா்.

நிகழ்ச்சியில், தெரிவு செய்யப்பட்ட முதன்மை விவசாயிகள் பங்கேற்றனா். அம்பாசமுத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் கற்பகராஜ்குமாா் வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

SCROLL FOR NEXT