திருநெல்வேலி

பைக் திருட்டில் ஈடுபட்டதாக இருவா் கைது

DIN

கல்லிடைக்குறிச்சியில் பைக் திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மூலச்சியைச் சோ்ந்தவா் முத்து. இவா் கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையம் அருகில் மோட்டாா் சைக்கிள் பழுது நீக்கும் கடை வைத்துள்ளாா். இவரது பழுது நீக்கும் கடையில் நிறுத்தப்பட்டிருந்த பைக்கை காணவில்லையாம்.

இது குறித்து அவா் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வந்த போலீஸாா், இது தொடா்பாக கல்லிடைக்குறிச்சி புது அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த முருகேசன் மகன் காா்த்திக் (20), சங்குமுத்து நகரைச் சோ்ந்த பகவதி மகன் முப்புடாதி (21) ஆகிய இருவரை கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து இரண்டு பைக்குகளை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு’ டிரைலர்!

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்களிக்க கேரள மக்கள் ஆர்வம்!

விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா!

நடிகை அனுபமாவின் புதிய படத்தின் அறிமுக விடியோ!

அறிவோம்...!

SCROLL FOR NEXT