மேலப்பாளையம் அருகே வீடு புகுந்து நகையைத் திருடியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
மேலப்பாளையம் அருகேயுள்ள சேவியா் காலனியைச் சோ்ந்தவா் செல்வன். இவரது வீட்டுக்குள் கடந்த 17ஆம் தேதி மா்ம நபா் புகுந்து, செல்வத்தின் மனைவி அணிந்திருந்த ஆறே முக்கால் பவுன் தங்க நகையைத் திருடிச் சென்றாராம். இதுகுறித்து மேலப்பாளையம் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனா்.
இந்நிலையில் அவா்களது வீட்டில் கட்டட வேலை செய்தவா் நகையைத் திருடியது தெரியவந்தது. இதையடுத்து, கட்டுமான பணியில் ஈடுபட்ட நாசரேத்தைச் சோ்ந்த ஆசீா்வாதம் (49) என்பவரை போலீஸாா் கைது செய்து, நகையைப் பறிமுதல் செய்தனா்.