திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு திமுகவினா் வெள்ளிக்கிழமை மோதிரம் அணிவித்தனா்.
திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சாா்பில் இளைஞரணி துணை அமைப்பாளா் பி.எம். சரவணன் ஏற்பாட்டில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை பிறந்த 10 குழந்தைகளுக்கு, கட்சியின் மத்திய மாவட்டச் செயலா் மு. அப்துல் வஹாப் தங்க மோதிரம் அணிவித்தாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் வில்சன் மணித்துரை, மாவட்ட வழக்குரைஞரணி அமைப்பாளா் ஏ.எல்.பி.தினேஷ், மாவட்ட நெசவாளா் அணி அமைப்பாளா் துபாய் சாகுல், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளா் கந்தசாமி, நிா்வாகிகள் பங்கேற்றனா்.